|
| | இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்து. |
|
| | 2009-07-03 11:23:44
இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் குறைபாடுகளை களையும் அதேவேளை இவ்வருட இறுதிக்குள் அவர்களை மீளவும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழமக்கள் ஐனநாயகக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். சந்திரகுமார் தெரிவித்தார்.
|
|
|
| | 13 ஆவது திருத்தத்திற்கு நீதிபதி விக்னராஐh வரவேற்பு |
|
| | 2009-07-03 08:28:44
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிறந்த ஒரு பாலமாக 13 ஆவது திருத்தம் அமையலாம் என நம்புவதாக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவிப்பு. |
|
|
| | நாம் எவருக்கும் அடிமையல்ல! தனித்துவங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! |
|
| | 2009-07-03 07:21:35
உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் உரிமையுடன் முன்வைக்க நீங்கள் முன்வர வேண்டும் என்றும், நாம் எவருக்கும் அடிமைகளல்ல என்பதை உணர்ந்து எமது தனித்துவங்களை விட்டுக் கொடுக்காத வகையில் கௌரவமான வாழ்க்கையை நாம் மேற்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். |
|
|
| | இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு |
|
| | 2009-07-03 05:54:51
புயலினால் இருப்பிடங்களை இழந்த 180 குடும்பங்கள் நிவாரணம் வழங்குமாறு அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை.
|
|
|
| | பாரவூர்தி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை. |
|
| | 2009-07-03 05:41:34
சீரான பொருட்கள் சேவைகள் விநியோகங்களை குடாநாட்டு மக்களுக்காக முன்னெடுக்க பாரவூர்தி உரிமையாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்திப்பு.
|
|
|
| | புலம் பெயர் இலங்கையருக்கான விசேட காப்புறுதித்திட்டம் அறிமுகம் |
|
| | 2009-07-03 05:24:16
தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அறிமுகம் செய்துள்ள விசேட திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையருக்கு கூடுதல் நன்மைகள். |
|
|
| | புலிகளுக்கு புனர்வாழ்வளிக்க ஐனாதிபதி விசேட திட்டம் |
|
| | 2009-07-03 05:14:18
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ள புலி உறுப்பினர்க்கான புனர்வாழ்வு திட்டத்திற்கு ஐனாதிபதி அங்கீகாரம்
|
|
|
| | “பாதிப்புக்குள்ளான மக்களின் மனதை ஆறுதல் படுத்தும் வகையில் எமது மனிதாபிமானப் பணிகள் அமைய வேண்டும்” : ஐனாதிபதி |
|
| | 2009-07-02 10:12:12
வடக்கிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் மனதை ஆறுதல் படுத்தும் வகையில் அபிவிருத்திப்பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என ஐனாதிபதி அறிவிப்பு
|
|
|
| | யாழ் நகரை வளம் கொழிக்கும் சிங்கப்பூராக மாற்றியமைக்க ஈ.பி.டி.பி திட்டம்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நல்லூர் பகுதிக்கான உதவி அமைப்பாளர் ரவீந்திரதாசன். |
|
| | 2009-07-02 10:07:12
நடைபெறவுள்ள யாழ் மாநகர சபைத்தேர்தல் 2009 இல் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி வெற்றிபெறுமாயின் சிங்கப்பூர் தேசம் போன்று யாழ் நகரை அபிவிருத்தி செய்ய கட்சியின் செயலாளர் நாயகம் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேசத்துக்கான உதவி அமைப்பாளர் அம்பலம் ரவீந்திரதாசன் தெரிவித்தார். |
|
|
| | இணக்க அரசியல் மூலம் அழிந்துபோன எம் தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் கி.பி |
|
| | 2009-07-02 06:42:57
எதிர்ப்பு அரசியல் நடாத்தி எம் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை விட்டு இணக்க அரசியல் மூலம் அழிந்து போயுள்ள எம் தேசத்தை கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டு மென ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கிபி தெரிவித்தார்
|
|
|
| | குடாநாட்டில் சுயதொழில் முயற்சிகளுக்கு இலங்கை வங்கி மூலம் கடன் வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்பாடு |
|
| | 2009-07-02 06:13:11
இலங்கை வங்கியின் கடனுதவித் திட்டங்கள் மூலம் குடாநாட்டில் மீன்பிடி விவசாயம் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கடன் உதவிகளை வழங்க ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது
|
|
|
| | பகுதி நேர ஆங்கில ஆசிரியர்களின் ஒன்று கூடல் நாளை இடம்பெறவுள்ளது |
|
| | 2009-07-02 05:57:41
உயர் டிப்ளோமா பகுதி நேர ஆங்கில ஆசிரியர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியதை அடுத்து நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள உயர் கல்வி நிலையத்தில் இது குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் ஒன்று கூடவுள்ளனர். |
|
|
| | நலன்புரி கிராமங்களில் உள்ள மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு |
|
| | 2009-07-02 05:00:15
தென்மராட்சி நலன்புரி கிராமங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
|
|
|
| | இது எங்கள் தேசம்! எங்கள் அரசு! முழு நிர்வாகத்தையும் சீரமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டம். |
|
| | 2009-07-01 12:21:23
யாழ் மாநகராட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது பின்னர் முழு வட மாகாணத்தையும் எமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதே எமது இலக்காகுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | ஆசிரியர் போட்டிப்பரீட்சை 2007 இல் கலந்து கொள்ள முடியாமற் போன பட்டதாரிகள் அமைச்சருடன் சந்திப்பு |
|
| | 2009-07-01 11:50:21
ஆசிரியர் போட்டிப்பரீட்சை 2007 இல் கலந்து கொள்ள முடியாமற் போன 68 யாழ் மாவட்ட பட்டதாரிகள் தமக்கான ஆசிரியர் பதவி நியமனம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
|
|
|
| | க.பொ.த உயர்தர பரீட்சை வெட்டுப்புள்ளிகள் நாளை வெளிவரும் |
|
| | 2009-07-01 06:05:32
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இவ்வருடத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் நாளை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு அறிவித்துள்ளது.
|
|
|
| | இந்தியாவின் வெளியுறவுத்துறை புதிய செயலாளராக நிரூபமா ராவ் நியமனம் |
|
| | 2009-07-01 05:54:43
இலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் இந்திய மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
| | மாதகல் கடலில் மீன் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளமைக்காக அமைச்சருக்கு கடற்தொழிலாளர் நன்றி தெரிவிப்பு. |
|
| | 2009-07-01 05:18:10
மாதகல் கடற்பகுதியில் மீன்பிடியை தொடர்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளமைக்காக இன்று மாதகல் கடற்தொழிலாளர்கள் அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு சென்று தமது நன்றியை தெரிவித்துள்ளனர்..(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | மானிப்பாய் மேற்கு நலன்புரி கிராம மக்கள் அமைச்சருடன் சந்திப்பு |
|
| | 2009-07-01 04:47:28
மானிப்பாய் மேற்கு கட்டுடை நலன்புரி கிராமங்களில் வசிக்கும் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காமற் போன 10 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தாம் எதிர் நோக்கும் பிரைச்சினைகள் குறித்து இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்கள் .(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | நலிவுற்ற குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் இன்று விநியோகம் |
|
| | 2009-07-01 03:27:35
நாட்டின் சீரற்ற நிலமைகளினால் நலிவுற்ற குடும்பங்களுக்கான நிவாரண விநியோகத்தை சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டின் கீழ் யாழ் செயலகம் இன்று நடைமுறைப்படுத்தவுள்ளது |
|