|
|
| | 2010-02-08 12:37:19
முன்னாள் ராணுவ தளபதியும் எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளருமாகிய ஜெனரல் சரத் பொன்சேகா இன்று மாலை ராணுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். |
|
|
| | ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார். |
|
| | 2010-02-08 12:13:30
இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா பயணம். |
|
| | 2010-02-08 11:59:16
ஜெனீவாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
| | சவுதி குவைட் அரசாங்கங்களின் உதவியுடன் பாரிய மொரகஹாகந்த - களுகங்கை நீர்த்தேக்க நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. |
|
| | 2010-02-08 11:53:47
விவசாய குடிநீர் நீர்மின் உற்பத்தி திட்டங்களை உள்ளடக்கிய மொரகஹாகந்த - களுகங்கை நீர்த்தேக்க நிர்மாணப்பணிகளுக்காக சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியம் நிதி வழங்க முன் வந்துள்ளது. |
|
|
| | தெமோதர சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தில் முருகன் விக்கிரகம் உட்பட பல பொருட்கள் கொள்ளை. |
|
| | 2010-02-08 11:49:12
பதுளை மாவட்டம் தெமோதர சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்தில் நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பால முருகன் விக்கிரகம் உட்பட பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. |
|
|
| | சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பம். |
|
| | 2010-02-08 11:45:38
இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கைகளின் மூலம் திட்டமிடப்பட்டுள்ள உத்தேச சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தின் நிர்மாண பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன. |
|
|
| | பல்கலைக்கழகங்களின் அனைத்து பீடங்களையும் ஒரே தினத்தில் ஆரம்பிக்க முடிவு. |
|
| | 2010-02-08 11:41:27
பல்கலைக் கழகங்களில் காணப்படும் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளையும் ஒரே தினத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. |
|
|
| | ரஷ்ய செஞ்சதுக்கத்திற்கு ஜனாதிபதி விஜயம். |
|
| | 2010-02-08 04:53:08
இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செஞ்சதுக்கத்தை சென்று பார்வையிட்டுள்ளார். (கலாச்சார நிகழ்ச்சி படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன. |
|
| | 2010-02-08 04:25:20
சுதந்திர தினத்தை முன்னிட்டும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்பொருட்டும் கண்டி பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த 14 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. |
|
|
| | மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை |
|
| | 2010-02-08 04:18:49
எதிர்வரும் காலத்தில் கடமையின் நிமித்தம் மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது. |
|
|
| | சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர். |
|
| | 2010-02-08 04:11:48
இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை கறுப்புப் பட்டியல் இடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. |
|
|
| | வவுனியா வடக்கு மீள்குடியேற்றம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம். |
|
| | 2010-02-08 04:05:49
வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப்பட உள்ளவர்களுக்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. |
|
|
| | யாழ். முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு இட ஒதுக்கீடு. மாநகர முதல்வர் அறிவிப்பு. |
|
| | 2010-02-08 03:59:33
யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார். |
|
|
| | வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்றோர் நாடு திரும்பியவர்கள் தொடர்பான விபரங்கள் பணியகத்தால் ஆரம்பம் |
|
| | 2010-02-08 03:54:48
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பான ஆய்வொன்றினை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆரம்பித்திருப்பதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். |
|
|
| | அவுஸ்திரேலியாவிலுள்ள இந்தியர்கள் ஏழைகள் போல காட்சியளிக்க வேண்டும் என்ற கூற்றினால் பலத்த சர்ச்சை. |
|
| | 2010-02-08 03:48:28
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் ஏழைகள் போல் காட்சி அளிக்க வேண்டும் என விக்டோரிய மாகாண அரசாங்கம் வெளியிட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. |
|
|
| | அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் மற்றுமோர் சட்டவிரோத குடியேற்றப்படகு. |
|
| | 2010-02-07 23:42:42
அரசியல் புகலிடம் கோரும் நோக்கில் அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த இலங்கை அகதிகளைக் கொண்ட படகொன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதனை மீட்க அவுஸ்திரேலிய கடற்படைக்கப்பலொன்று சென்றுள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
|
| | இடம்பெயர்ந்த சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ஜப்பான் உதவி. |
|
| | 2010-02-07 23:39:00
இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் வாழும் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. |
|
|
| | 2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் முதல்வாரமளவில் சமர்ப்பிக்கப்படும். - பிரதி நிதி அமைச்சர். |
|
| | 2010-02-07 23:35:32
2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் மாதம் முதல்வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். |
|
|
| | யாழ். கோட்டையை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம். |
|
| | 2010-02-07 23:31:50
சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த யாழ். ஒல்லாந்தர் கோட்டையை நெதர்லாந்து அரசின் உதவியுடன் புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. |
|
|
| | சுகாதார ஊழியர்கள் எதிகாலத்தில் தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை. |
|
| | 2010-02-07 23:28:47
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தமது வாக்குகளை தபால் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். |
|