பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்டபூர்வமானது – சபாநாயகர் தெரிவிப்பு!

Friday, July 26th, 2024

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.

அதன்படி பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானதும் அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

000

Related posts:


முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் கால எல்லை ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பு – கல்வி அமைச்ச...
QR குறியீட்டு முறைமையூடாக இதுவரை 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவு - 801 நிரப்பு நிலையங்களில் QR முறைமைய...
பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளியுறவுத்துறை அமைச்...