டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி – பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி விலகல்!
Wednesday, July 24th, 2024
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி விலகியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் பிரசார கூட்டமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காயமடைந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளின் பின்னர் கிம் சீட்டிலை பதவி விலகுமாறு ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், குறித்த சம்பவத்தின்போது, ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டிற்குத் தாம் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலகுவதாக அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர்- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
ஜி.சி.ஈ. சாதாரணப் பரீட்சை மாற்றம் ஏதுமின்றி நடக்கும்!
நயினாதீவிற்கு படகுகளில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு அங்கி கட்டாயம் அணிய வேண்டும் - வீதி அபிவிருத்த...
|
|
|


