பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டும் – மத்திய சுற்றாடல் அதிகார சபை வலியுறுத்து!
Monday, January 15th, 2024
பிளாஸ்டிக் விளக்குமாறு மற்றும் தும்புத்தடி ஆகியவற்றின் இறக்குமதியை உடனடியாக தடைசெய்ய வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான குறைக்குழுவின் கலந்துரையாடலின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என குறித்த குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் லன்ச் ஷீட் பாவனையை தடை செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாடு முழுவதும் 1990 அம்பியூலன்ஸ்களை விஸ்தரிப்பு - இந்திய பிரதமர் உறுதி!
சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு!
மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - 7 ஆவது இந்து சமுத்திர மாநாட...
|
|
|


