போட்டித் தொடர்களில் பங்கேங்கும் இலங்கை அணியின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கு AI தொழில்நுட்பம் – கிரிக்கெட் வர்ணனையாளர் பந்துல சமன் வதுரேகம தெரிவிப்பு!
Saturday, July 20th, 2024
சர்வதேச போட்டித் தொடர்களில் பங்கேங்கும் இலங்கை அணியின் பெயர் பட்டியலை தயாரிப்பதில் அணியின் தேர்வுக்குழு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
பெரும்பாலும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் அணியை தெரிவு செய்வதற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என கிரிக்கெட் வர்ணனையாளர் பந்துல சமன் வதுரேகம தெரிவித்துள்ளார்.
”இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டில் AI தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை இணைக்க உழைத்து வருகின்றனர்.
AI தொழில்நுட்பத்தின் கீழ், அணியையும் அணித் தலைவரையும் தேர்ந்தெடுக்க முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
00
Related posts:
பங்களதேஷ் பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டுகள் தடை!
தொடரை வென்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது பங்களாதேஷ்!
109 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி !
|
|
|


