அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்து ஆரம்ப பிரிவுகள் மீண்டும் ஆரம்பம் !
Friday, April 12th, 2024எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து அதாவது பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்திலிருந்து யா/மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றுமுதல் 5 வரையான ஆரம்ப வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் குறிப்பாக தென்மராட்சி வலயத்தில் மிகவும் பழைமைவாய்ந்த அதாவது 150 ஆவது வருடத்தை நெருங்கும் வரலாற்றை கொண்ட பாடசாலைகளுள் ஒன்றான யா/ மட்டுவில் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றுமுதல் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் இருந்துவந்துள்ளன.
ஆனால் சில வருடங்களாக இதரபல காரணங்களால் இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு வகுப்புகள் அதிகாரிகளால் இடைநிறுத்தப் பட்டிருந்தன.
இதையடுத்து குறித்த பகுதி கல்வி சமூகத்தினரும் நலன்விரும்பிகளும் பெற்றோரும் தமது பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்களை இடைநிறுத்தியமைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று பாடசாலைக்கு அமைச்சர் நேரில் சென்று ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் மற்றும் கல்விப்புலத்தினரின் கருத்துக்களை ஆராய்ந்தறிந்தார்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று மீளவும் குறித்த ஆரம்ப பிரிவு வகுப்புகளை முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதையடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி அதாவது விடுமுறை கழிந்து பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படும் போது குறித்த வகுப்புகளை முன்னெடுக்கும் வகையில் தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரதேச கல்விச் சமூகம் மற்றும் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த சமூக அக்கறையை பாராட்டி கௌரவித்துள்ளதுடன் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|