அமரர் அகிலனின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி மரியாதை!
Friday, July 3rd, 2026
….
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் அகிலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து அஞ்சலிமரியாதை செலுத்தினார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தீவிர ஈடுபாடு கொண்டு பயணித்த அமரர் சுப்பிரமணியம் அகிலன் உடல்நல குறைவு காரணமாக கடந்த 01.7.2026 அன்று தனது 65 ஆவது வயதில் காலமானர்.
கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் போல் சிவராசா,அவர்களின் உடன்பிறவா சகோதரரான அமரர் அகிலனின் பூதவுடல் வேலணை அம்பிகைநகரில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
அமரருக்கான அஞ்சலியின்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், ஊடக செயலாளர் பன்னீர்செல்சம் ஸ்ரீகாந்த், சிரேஸ்ட முக்கியஸ்தர் கமலேந்திரன் கந்தசாமி ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0000
Related posts:
|
|
|


