வடக்கில் தொடர்ந்து தீவிரமடையும் கொரோனா அபாயம் – மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, May 2nd, 2021

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர்,.கேதீஸ்வரன் வெளியிட்டுள்’ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 7 பேரில் ஒருவர் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்.

மேலும் 4 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்பதுடன்,  மேலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தவர் எனவும், பருத்தித்துறையில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், மல்லாவி, மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் 4 பேரும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர், வவுனியா மாவட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும், பூவரசங்குளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும், வவுனியா மரக்கறி சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேருக்கும், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த 2 பேருக்குமாக வடக்கில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

Related posts: