யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் – எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம் !

Monday, February 19th, 2024

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

திங்கள்முதல் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைளும் முழுமையாக ஆரம்பம் - புதிய சுக...
தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே பேச்சுக்களை அரசு முன்னெடுகின்றின்றது - இந்தியாவின் ...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்; இவ்வருடம் 7 பில்லியன் டொலர் எதிர்பார்ப்பு - ஜனவரி மாதம் 500 மில். டொலர...