8 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!
Thursday, July 12th, 2018தற்போதைய காலநிலை மற்றும் அவ்வப்போது ஏற்படும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்தியநிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றும்(12) நாளையும்(13) விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 54 வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா - முல்லை. கேப்பாப்புலவு ...
தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் - கல்வி அமைச்சர்!
மன்னார் சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை ஆரம்பம் !
|
|