சூறாவளி தாக்கும் அபாயத்தில் இலங்கை!
Thursday, October 12th, 2017
இலங்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.காற்றழுத்தம், வளிமண்டலத்தில் குழப்ப நிலை போன்றவைகள் எதிர்வரும் நாட்களில் ஏற்பட கூடும் எனவும், அதன் ஊடாக எந்த ஒரு நாட்களிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.இந்த மாதம் இலங்கையின் வெப்ப மண்டலத்தில் அழுத்தம் ஏற்பட கூடும் என்பதனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
இலங்கைக்கு அழைக்க முடியாத நபர்களை தவிர்த்து ஏனைய அனைவரும் விசா வழங்கப்படும் - குடிவரவு குடியகல்வு த...
புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் தொழிற்சங்க போராட்டம் - பல துறைகள் ஸ்தம்ப...
பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு - 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 296 பேர் கைது!
|
|