பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு – 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 296 பேர் கைது!
Wednesday, December 20th, 2023பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 109 பேரிடம் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 184 பேரை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பணம் அறவிடாது பேருந்துகள் வழங்கப்படமாட்டாது – இ.போ.ச
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் - ஜனாதிபதி !
இந்தியாவை மிரட்டும் கறுப்பு பூஞ்ஞை நோய் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!
|
|