சனிக்கிழமைகளிலும் மனுக்கள் பரிசீலிக்கப்படும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
Saturday, May 23rd, 2020இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக சனிக்கிழமைகளில் மனுக்களை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவரைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாத மனுக்கள் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஜூன் 13ஆம் திகதி ஆகிய இரண்டு நாள் அழைக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
மேலும் மார்ச் 23ஆம் திகதி முதல் மே 6ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக கிடப்பில் உள்ள மனுக்கள் இந்த இரண்டு சனிக்கிழமையும் பரிசீலிக்கப்படும் என உயர் நீதிமன்றப் பதிவாளர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளார்
Related posts:
மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடி நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப...
சீனாவின் விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்...
இறுதி மூச்சவரை அரசியலில் ஈடுபடுவேன் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|