இறுதி மூச்சவரை அரசியலில் ஈடுபடுவேன் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023

தான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியின் முன்னோக்கி செல்லும் பாதையில் செல்ல பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக உறுதிப்படுத்தினார்.

நீண்ட காலமாக இலங்கை அரசியலில் முக்கிய பங்கை வகித்த முன்னாள் ஜனாதிபதி, அரசியல் களத்திற்கு பங்களிப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தும் நோக்கத்தை மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தேர்தல் போட்டியில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்பிட்ட நபர் தொடர்பில் கட்சி முடிவெடுக்கவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: