ஏப்ரல் 21 தாக்குதல்: அமைச்சரவை உப குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டம்!

Monday, April 5th, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக குழுவின் செயலாளர், ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹனதீர குறிப்பிட்டார்.

Related posts: