மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடி நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Sunday, September 10th, 2023

மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது மதுவரி சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

குறித்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தித்து, அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய வருமானத்தை பெறுவதற்கு தேவையான திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: