பங்களாதேஷ் உணவகம் தாக்குதல் – ஒருவர் சுட்டுக்கொலை!

Saturday, September 3rd, 2016

பங்களாதேஷில் கடந்த ஜூலை மாதம் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலை நடத்திய தீவிரவாத படையினருக்கு பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஜமாத்-உல்-முஜாகிதீன் என அழைக்கப்படும் இவர் பங்களாதேஷின் முன்னாள் இராணுவத்தலைவராக செயற்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் பங்களாதேஷில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் புகுந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததுடன் அதில் 22 பேரை சுட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: