கங்குலிக்காக உயிரையும் விடுவேன் – யுவராஜ்

Sunday, July 9th, 2017

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி போன்ற தலைவர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்  என இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தனது 45 ஆவது பிறந்த தினத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் யுவராஜ் சிங் இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கங்குலி கிரிக்கெட்டில் சிறந்த வீரராக திகழ்ந்ததோடு கொல்கத்தா இளவரசன் வங்க புலி மற்றும் தாதா என்றும் செல்லமாக அழைக்ககப்பட்டவா்.இவரது தலைமையில் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டதுடன் இந்திய அணியின் துரித வளர்ச்சிக்கு அவர் பெரும் பங்காற்றியுள்ளார். தற்போது கிரிக்கெட் வழிக்காட்டுதல் குழுவின் உறுப்பினராவும் கங்குலி செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: