இலங்கைக்கு 45,000 டொலர்களை நன்கொடை வழங்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள்!
Saturday, August 13th, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது.
சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘யுனிசெப்’ ஊடாக இந்தப் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா, இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.
இந்த போட்டிகளின்போது பெற்றுக்கொண்ட பரிசுத்தொகையினையே அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
000
Related posts:
ஐ.பி.எல் தொடர் - டெல்லி அணியை துவம்சம் செய்து கொல்கத்தா !
மணியடித்து ஆரம்பித்து வைத்தார் சங்கா!
பிணைமுறி மோசடி : CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவிக்கு உத்தரவு !
|
|
|


