மணியடித்து ஆரம்பித்து வைத்தார் சங்கா!
Friday, June 10th, 2016இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி நேற்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும் போட்டியை முக்கியஸ்தர் ஒருவர் 5 நிமிடம் அங்குள்ள மணியை அடித்து போட்டியை ஆரம்பித்து வைப்பார்.
அந்தவகையில் நேற்றைய போட்டியை இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் ஜாம்பவானுமாகிய குமார் சங்ககார குறித்த மணியை ஒலிக்கவிட்டு போட்டியை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிறிஸ் கெய்ல் அதிரடி: இங்கிலாந்தை புரட்டிப்போட்டது மேற்கிந்திய தீவுகள்
மாவட்ட சதுரங்கப்போட்டி - கிளிநொச்சி விவேகானந்தாவுக்கு மூன்று தங்கம்!
இலங்கை – ரஷ்யா இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களைபலப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் நாமலின் ...
|
|