குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு!

Saturday, August 5th, 2017

பிரபல குத்துச் சண்டை வீரர் விளாடிமிர் கிளிட்ஸ்கோ(wladimir-klitschko), போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். உக்ரேய்ன் நாட்டைச் சேர்ந்த 41 வயதான கிளிட்ஸ்கோ அதிபார உலக சம்பியன் குத்துச் சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பிரித்தானிய வீரர் அன்ரனி ஜொஸ்வா ( Anthony Joshua )உடன் நடைபெற்ற போட்டியில் 11ம் சுற்றில் கிளிட்ஸ்கோ தோல்வியைத் தழுவினார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீளவும் கிளிட்ஸ்கோவுடன் போட்டியிட முடியும் எனவும்  லோஸ் ஏஞ்சல்ஸில் இந்தப் போட்டியை நடத்த முடியும் எனவும் ஜொஸ்வா நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

எனினும், மீளவும் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் குத்துச் சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாகவும் கிளிஸ்ட்கோ தெரிவித்துள்ளார்.தாம் கனவு கண்ட அனைத்தையும் அடைந்து விட்டதாகவும், விளையாட்டின் பின்னரான அடுத்த வாழ்க்கையை தொடர விரும்புவதாகவும் கிளிட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.

Related posts: