யாழ். மாவட்ட பெண்கள் கரப்பந்து தெல்லிப்பளை செயலகம் சம்பியன்!

Wednesday, April 4th, 2018

யாழ். மாவட்ட செயலகத்தின் விளையாட்டு பிரிவினரால் நடாத்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.

இதன் இறுதியாட்டம் முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியை எதிர்த்து பருத்தித்துறை பிரதேச செயலக அணி மோதியது. 1 ஆவது செற்றில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 25:12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 2 ஆவது செற்றில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25:15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர். 3 ஆவது  செற்றில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்திய போதும் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 25:18 என்ற என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.

Related posts: