இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

Friday, July 2nd, 2021

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டீ சில்வா அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், தசுன் சானக 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட சாம் கரண் 5 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் தலைவர் ஒயின் மோர்கன் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் ஜோ ரூட் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஜேசன் ரோய் 52 பந்துகளுக்கு முகங்கொடுத்து 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சாமிக கருணாரத்ன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்று கொண்டனர்.

இதற்கமைய 2 க்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

000

Related posts: