200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – கணக்காய்வு அலுவலகம் எச்சரிக்கை!

Wednesday, March 10th, 2021

நாடு முழுவதிலுமுள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தை போன்று பௌதிக மற்றும் மனித வளம் தொடர்பில் நிலவும் முறன்பாடுகள் இதற்கு காரணமாகும் என்று அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் இரண்டாம் நிலை பாடங்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்பதும் மற்றும் மொரு பிரச்சினையாகும் என்றுமு; சுட்டிக்காட்டியுள்ள தேசிய காணக்காய்வு அலுவலகம் இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: