அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!
Thursday, December 30th, 2021
எதிர்வரும் 3 ஆம் திகதிமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (30) வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நிலைமை காரணமாக, கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் நிறுவனத் தலைவரின் அனுமதியுடன் பணி புரிவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அரச சேவைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள யாழ்.சுன்னாகம் நூலகம்!
சாவகச்சேரி கால்நடை மருத்துவரின் அறிவிப்பு!
நீரில் மூழ்கி ஒருவர் பலி : வடமராட்சியில் சம்பவம்!
|
|
|
வீசா நிபந்தனைகளை மீறிய குற்றத்தில் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் 6 இந்தியப் பிரஜைகள் கடற்படையால் கை...
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் - பொலிஸ் ஊடக பேச்ச...
கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் - பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும...


