நீரில் மூழ்கி ஒருவர் பலி : வடமராட்சியில் சம்பவம்!
Friday, November 16th, 2018வடமராட்சி அல்வாய் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
நீராடச் சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தவர்கள் கொடிகாமம் காவல்நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கடற்படையினர் குளத்தில் தேடுதல்களை மேற்கொண்டனர். இதன் போது அவரது உடல் சேற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பலியானவர் அல்வாய் பகுதியை சேர்ந்த 47 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தரம் 5 மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேசத்தினுள் உள்ள மதகுகள் புனரமைக்கப்பட வேண்டும் - வடமாகாண ஆளுந...
வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளிற்கு செல்வந்த நாடுகள் உதவவேண்டும் - இந்து சமுத்திர மாந...
|
|