வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள யாழ்.சுன்னாகம் நூலகம்!
Wednesday, November 2nd, 2016
வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ். சுன்னாகம் பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்கள், பொது வாசகர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு கட்டமாகப் பல்வேறு துறை சார்ந்த நூல்கள் நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்சிப்படுத்தலில் உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
வாசிப்பு மாதத்தை ஒட்டி “வாசிப்பு உலக அறிவிற்கான நுழை வாயில்” எனும் தொனிப்பொருளில் முன்பள்ளிகள் மற்றும் சனசமூக நிலையங்களுடாக நடமாடும் சேவைகளையும் சுன்னாகம் பொதுநூலகம் முன்னெடுத்து வருகிறது. இந்த நடமாடும் சேவைகளில் மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்குபற்றிப் பயன் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாணவர், பொதுவாசகர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகளையும் நடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|