எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் – ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் அறிக்கை!
Friday, January 22nd, 2021எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு 5 நபர்களுக்கும் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அவர்களில் பெருமளவானோர் பெண்கள் என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வயது முதிர்ந்தவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம், ஹெல்ப் எஜ் ஸ்ரீலங்கா அமைப்புடன் இணைந்து, பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விலை வீழ்ச்சியால் கரட்,கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பு!
தொழிற்கல்வியில் இலவசக் கல்வி : இந்தஅரசாங்கமே உறுதி செய்தது - ஜனாதிபதி
வடக்கு - கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் - புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரை...
|
|