வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் 41 வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு – 30 திட்டங்கள் நிறைவு என்கிறார் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!
Saturday, February 2nd, 2019வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் வீதிகள் புனரமைத்தல், வீதி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட 41 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவற்றில் 11 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் ஏனைய 30 திட்டங்களும் நிறைவுபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
24 வீதி மற்றும் ஒழுங்கை புனரமைப்பில் 9 ஐ தவிர ஏனைய வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட தவிசாளர் சந்தை புனரமைப்பு, வீதி விளக்குகள் பொருத்தல், 25 வீட்டுத் திட்டத்திற்கு மின் இணைப்புக்கொடுத்தல், கடல் அரிப்பு தடுப்பணை உட்பட மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!
நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய உற்சவ காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றாக தடை - வேலணை பிரதேச...
அரசாங்க வைத்தியசாலைகளில் வாகன அனுமதி பத்திரத்துக்கான பரிசோதனை வசதி!
|
|