வில்பத்து தேசிய சரணாலயம் வழமைக்கு!

Monday, September 11th, 2017

வில்பத்து தேசிய சரணாலயம் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்றுமுதல்  திறக்கப்பட்டுள்ளதாக வில்பத்து தேசிய சரணாலயத்தின் பொறுப்பாளர் லக்ஸ்மன் பெரேரா தெரிவித்துள்ளார்.

வில்பத்து தேசிய சரணாலயம் கடந்த ஒன்றரை மாத காலமாக மூடப்பட்டிருந்த நிலையிலே  இந்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது.   நாட்டில் நிலவிய கடும் வரட்சி காரணமாக வில்பத்து தேசிய சரணாலயத்தில்  உள்ள நீர் நிலைகளில் வற்றிப்போயிருந்தன.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக குறித்த நீர் நிலைகள்  நிரம்பியுள்ளன. இதனையடுத்த துறைசார் அமைச்சும், வனவிலங்கு அமைச்சும் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் சரணாலயத்தை மீளவும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: