யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு – இரத்த தானம் செய்ய முன்வருமாறும் இரத்த வங்கி கோரிக்கை!

Sunday, October 31st, 2021

யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது.

எனவே குருதி கொடையாளர்கள் 077 210 5375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு இரத்த தானம் செய்ய முன்வருமாறும் இரத்த வங்கி கோரியுள்ளது .

இது தொடர்பில் இரத்த வங்கி மேலும் குறிப்பிடுகையில் -,

ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள இரத்த வங்கிக்குச் சென்று இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Covid – 19 தடுப்பூசி போட்டிருந்தால், போட்ட தினத்திலிருந்து ஒரு கிழமையின் பின்பு இரத்ததானம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது..

அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அது சுகமடைந்து தொற்று இல்லையென உறுதிப்படுத்திய தினத்திலிருந்து ஒரு மாதத்தின் பின்பு நீங்கள் இரத்ததானம் செய்யலாம் என்றும் அறிவித்தள்ளதுடன்  சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இரத்ததான முகாம்களையும் நடத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: