நாளை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் பகுதிகள்!
Sunday, March 29th, 2020
நாட்டின் சில பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. இதற்கமைய தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் நாளையதினம் எட்டு மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்படவுள்ளது.
அதற்கமைய மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணத்தை தவிர்த்து ஏனைய பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர்!
கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு 286 பில்லியன் ரூபா செலவு - அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்ப...
'ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்' தொடர்பில் புதிய சில விதிகள் அறிமுகம் - மத்திய ...
|
|
|


