இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர்!

Tuesday, May 26th, 2020

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் எல்லா சந்தர்பங்களிலும் சமூக இடைவெளியை பேண வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்...
வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி - காணிகள் பகிர்ந்தளிப்பு - அமைச்சர் டக்ளஸ் நடவட...
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் - பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!