‘ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்’ தொடர்பில் புதிய சில விதிகள் அறிமுகம் – மத்திய வங்கி ஆளுநரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, March 12th, 2022

‘ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்’ தொடர்பில் சில விதிகளை அறிமுகப்படுத்தி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

16  விதிகள் அடங்கிய இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று நள்ளிரவு வெளியானது. இதன்படி, ஒவ்வொரு ஏற்றுமதியாளரும், இலங்கைக்கு வெளியில் ஏற்றுமதி செய்யப்படும் எல்லாப் பொருட்கள் அல்லது வழங்கப்படும் பணிகள் தொடர்பில், கப்பலேற்றும் அல்லது பணிகளை வழங்கும் திகதியிலிருந்து 180 நாட்களினுள் ஏற்றுமதிப் பெறுகைகளை கட்டாயமாக இலங்கையில் பெறுதல் வேண்டும்.

அத்தகைய பெறுகைகளைப் பயன்படுத்தி இலங்கையில் கிடைக்கப்பெற்ற ஏற்றுமதிப் பெறுகைகளின் எஞ்சியதை, தொடர்ந்து வருகின்ற மாதத்தின் ஏழாவது நாளன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கை ரூபாவாக கட்டாயமாக மாற்றுதல் வேண்டும் என வர்த்தமானியில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – பல்கலைக்கழக மானிய...
கடந்த பருவ காலங்களில் உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தைவிவசாய அமைச்சு ஈட்டியுள...
தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படங்களை செயன்முறைக்கு உட்படுத்துவதற்கான கட்டணம் அதிகரிப்பு – வர்த்தமான...