யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!

அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இன்று யாழ்ப்பாணம் உட்பட 6 மாவட்டங்களில் தடுப்பூசிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டிலும், அவர்களது கண்காணிப்பிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில், PMCU கைதடி, அரியாலை பிரப்பனை குளம் மஹாமாரி அம்மன் திருமண மண்டபம், ஸ்ரீ நாரதா பாடசாலை, DH கோப்பாய், .J/வடஹிந்து பெண்கள் பாடசாலை, DH சங்கானை, அமுதா சுரபி மண்டபம் ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் - தேசிய டெங்க...
30 ஏக்கர் காணியை அம்பேவளை பண்ணைக்கு விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!
தாய்லாந்து – இலங்கை இடையே இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை – பெப்ரவரியில் கையெழுத்திட திட்டமிட...
|
|