30 ஏக்கர் காணியை அம்பேவளை பண்ணைக்கு விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Wednesday, December 28th, 2022

அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த காணியை, பசுக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுத்தல் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இலங்கை - உக்ரேனிய இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ...
பசுமை விவசாய கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் பெண் உறவுகளுக்கு புடின் விடுத்துள்ள விசேட செய்தி!