முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவு அதிகரிப்பு அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஆராய்வு!
Monday, June 10th, 2024
முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் முன்பள்ளி ஆசிரிய பணியில் சுமார் 34,000 பேர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மே 5 பணிப்புறக்கணிப்பு!
கொரோனா தொற்றாளர்களுக்கு ஆபத்தாக மாறும் இரத்த உறைவு – எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!
உள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுவதற்கு அனுமத...
|
|
|


