கோவில் பிரச்சனை தொடர்பில் எடுத்துரைத்த ஆஸ்திரேலியா பிரஜை மீது இன்று வாள்வெட்டு!
Wednesday, November 9th, 2022பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாகத்தில் பிரச்சனை இடம்பெற்று வருவதாக அவுஸ்திலேரியாவில் இருந்துவருகைதந்துள்ள பண்டத்தரிப்பை சேர்ந்த கோயிலுக்கு நிதி பந்தளிப்பை தொடர்ச்சியாக வழங்கி வரும் நபர் ஒருவர் குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்து ஆலய நிர்வாக ஊழல் மோசடி தொடர்பில் தீர்வு பெற்று தருமாறு கோரிய நிலையில்
இன்று காலை அவுஸ்திலேரியாவில் இருந்து வருகை தந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவர் அடங்கிய குழு இனிமேல் ஆலய நிர்வாகத்தில் தலையிடுவியா எனகேட்டு அவர் மீதுசரமாரியான வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,
குறித்து வாள் வெட்டு தாக்குதலின் போது பலத்த காயத்துக்குள்ளாகி தற்பொழுது யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறித்த தாக்குதலில் 42 வயதுடைய பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டுப் பிரஜையே படுகாயமடைந்துள்ளார். வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஆலய நிர்வாக பிரச்சனையினை வடக்கு ஆளுநரிடம் முறையிட்டவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|