மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது : சுகாதார அமைச்சர்!

Monday, May 29th, 2017

வெள்ளம் தணிவதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான மருந்துகள் எந்தவித தட்டுபாடும் இன்றி சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவுறுத்தல்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவற்றுக்காக நிதி எந்தவித தடையும் இன்றி விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், நிதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.

Related posts: