அடுத்தமாத இறுதிக்குள் ஓய்வூதியக்காரர்களுக்கு நிலுவை – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!
Thursday, August 1st, 2019அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல ஓய்வூதியக்காரர்களது ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பான நிலுவைகள் அனைத்தும் செலுத்தி முடிக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் 50 சதவீதமான ஓய்வூதிய நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மொனராகலை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற 19 ஆவது சத்யேக்ஷனய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சகல ஓய்வூதியக்காரர்களுக்கும் அக்ரஹார காப்புறுதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
தெங்கு அறுவடை 10 சதவீதத்தினால் வீழ்ச்சி - தெங்கு உற்பத்திச் சபை தலைவர்
குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்...
சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை - மருந்து கொள்வனவுக்கு 82 ...
|
|