இலங்கையின் 10 வங்கிகள், மின்சாரசபை உள்ளிட்டவற்றை தரமிறக்கியது பிட்ச் தரப்படுத்தல்!

Friday, January 13th, 2023

பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம், இலங்கையின் 10 வங்கிகள், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட லக்தனவி லிமிடெட் ஆகியவற்றின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை தரமிறக்கியுள்ளது.

பிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் அண்மைக்கால இறையாண்மை குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்தே இலங்கையின் 10 வங்கிகளது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரமிறக்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் தேசிய மதிப்பீட்டை ஏஏ மறை தரத்தில் இருந்து பி தரத்துக்கும், ஸ்ரீலங்கா டெலிகொம்மின் தேசிய மதிப்பீட்டை ஏஏ மறையில் இருந்து ஏ தரத்துக்கும், பிட்ச் தரமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கலாசார மண்டபத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது - சபையில் முன்னாள் முதல்லர் யோகேஸ...
புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்து அமைச்சு அறிவ...
தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல - வெளியேறினால் பொருளாதாரத்திற்க...