மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியல் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, December 14th, 2018

அரியாலை தெற்கு மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

குறித்த சனசமூக நிலையத்தினர் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: