ஒன்பது இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!
Monday, March 6th, 2017இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதுடன், யாழ் மாவட்ட கடற் தொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்கள் அனைவரையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக, யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விலை அதிகரிப்பு: தரம் குறைந்த பொருட்கள் சந்தையில் – எச்சரிக்கும் இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்...
கொரோனா வைரஸ்: தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!
நன்றி கெட்ட தமிழினம் அவப் பெயரை மாற்றும் வகையில் எம்முடைய வாக்களிப்பு அமைய வேண்டும்: தென்மாராட்சி இள...
|
|