புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறப்பு!

Wednesday, March 24th, 2021

வரலாற்றில் முதல் தடவையாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை புற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகைதந்து திறந்துவைத்திருந்தார்.

இது தொடர்பில் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா கருத்து தெரிவிக்கையில் –

உலகளாவிய ரீதியிலும் சரி இலங்கையிலும் சரி இறப்புகளுக்கான காரணமாக 2 ஆவது இடத்தில் புற்றுநோய் காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து  தடுப்பதன் மூலம் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள வடமாகாணத்தில் முதல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய நிலையம் வடமாகாண மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிலையமானது புற்றுநோய் அறிகுறி எதுவும் ஏற்பட முன்னர் ஒரு சாதாரண மனிதருக்கு  எதிர்காலத்தில் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான அல்லது புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா?என்பதை பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒரு நிலையமாகும் என தெரிவித்துள்ள பமில் பணிப்பாளர்

குறித்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான ஒரு நிலையமாக இது தொழிற்படும் எனறும் வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளதுடன் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி எவ்வித தயக்கமும் இன்றி தமக்குரிய பரிசோதனைகளை குறித்த சிகிச்சை நிலையத்திற்கு வருகை தந்து மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: