மின்சாரம் தொடர்பில் விரைவில் புதிய மின்சார சட்டமூலம் – நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என துறைசார் அமைச்சர் அறிவிப்பு!!

Monday, May 15th, 2023

மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே  தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது சம்பந்தமான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்கால...
இம்மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்பாட்டில் வரும் - இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் !
இலங்கையுடனான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜ...