புகையிரதம் மீது கல்வீச்சு : ஒருவர் பலி!

புகையிரத பயணத்தின் போது எறியப்பட்ட கல்லால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுர போதனா வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் நேற்று(7) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலையின் நிமிர்த்தம் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வனவாசல – களனி புகையிரத நிலையங்களுக்கு இடையில் கல்வீச்சு தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 49 வயது நிரம்பிய உதவி கல்வி இயக்குனரே உயிரிழந்துள்ளார்.
Related posts:
வாழ்வுக்காக வீதியில் போராடும் தொண்டராசிரியர்கள்!
இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மஹிந்த ரா...
சுற்றுலாத்துறையில் வருமானம் அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டு!
|
|