பாற்பண்ணைப் பகுதிகளில் முடக்கம் தொடரும் – வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு!
Thursday, April 8th, 2021
யாழ். திருநெல்வேலிச் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்னரே சந்தை மற்றும் கண்காணிப்பு வலையமாகவுள்ள பாற்பண்ணைப் பகுதிகளை மீளத் திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிக விரைவில் 2 ஆம் கட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள், சந்தை வர்த்தகர்கள் மற்றும் சந்தையைச் சூழவுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் பெறப்பட்டதன் பின்பே முடக்கம் தளர்வு தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தலை பழைய முறையில் நடத்தவும் சிக்கல் - தேர்தல் ஆணையாளர் !
யாழில் முதன்முறையாக நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம்!
99 வீதமானவர்கள் ஜனாதிபதி ரணிலை நிபந்தனையின்றி ஆதரவளிக்க கூறுகின்றனர் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரி...
|
|
|


