யாழில் முதன்முறையாக நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம்!

Thursday, March 14th, 2019

யாழ். பண்ணையிலுள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரத்தின் செயற்பாடுகள் இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளதாக யாழ். மாவட்ட காச நோய் தடுப்பு வைத்திய அதிகாரி யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார்.

தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தினால் 160 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த இயந்திரம் யாழ். காசநோய் தடுப்பு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நோயாளர்கள் இலவசமாக சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும். நோயாளர் பரிசோதிக்கப்படும் போது மருத்துவர் நேரடியாக அவற்றை அவதானிக்க முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக இவ்வியந்திரம் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவு...
சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்!
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கைதிகளை விடுவிக்க முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!