தேர்தலை பழைய முறையில் நடத்தவும் சிக்கல் – தேர்தல் ஆணையாளர் !

Tuesday, August 7th, 2018

மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென இதுவரையில் தீர்மானம் இல்லை. பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் புதிதாகச் சட்ட வரைபு ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த முடியாது. புதிய சட்டவரைபு ஒன்றினால் பழைய முறைமையை மீண்டும் சட்டமாக்கினால் மட்டுமே அது முடியும். புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைமுறையில் இருந்து வந்த பழைய தேர்தல் முறைமை தொடர்பான 1988 ஆம் இலக்க 2 ஆம் பிரிவு நீக்கப்படுகின்றது.

இதனால் மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதிலும் சிக்கல் காணப்படுகின்றது. புதிய முறையில் நடத்துவதானால் எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

Related posts:

தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் இலங்கை முன்னேற்றம் - இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு தெரிவிப்பு!
பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன - அமைச்...
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல்...