பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன – அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு!
Thursday, May 13th, 2021பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிகிப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அரசாங்கத்தின் முடிவை அறிவித்ததன் பின்னர், உரங்களைப் பெறுவதற்கு விவசாயிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் - தமிழகத்தில் பரபரப்பு!
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும...
2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க ...
|
|